தில்லை கீதம்

Illustration of a bird flying.
  • பொன்னியின் செல்வன் நாவலில் விண்ணகரக் கோயில் என வர்ணிக்கப்பட்டுள்ள வீரநாராயணப் பெருமாள் கோயில்.

    விஜயாலய சோழனின் பேரனான முதற் பராந்தகச் சோழன் “மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி’ என்ற பட்டம் பெற்றவன். சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன் அவனே தில்லைச் சிற்றம்பலத்துக்கு அவன் பொன் கூரை வேய்ந்து சரித்திரப் புகழ்பெற்றவன். ‘சோழசிகாமணி’ ‘சூரசிகாமணி’முதலிய பல விருதுப் பெயர்களோடு வீரநாராயணன் என்னும் சிறப்புப் பெயரையும் அவன் கொண்டிருந்தான். ‘வீரநாராயணன் ஏரி’ பராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். மானிய கேடத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வரக்கூடுமென்று பராந்தகன்…

    செப்டம்பர் 27, 2022
  • பொன்னியின் செல்வன் நாவலில் இடம் பெற்ற பிரம்மாண்டமான வீராணம் என்கின்ற வீர நாராயணன் ஏரி.

    ஆடித் திங்கள் 18ம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீரநாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தை சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் சிறிதும் கவலைப்படவில்லை. அகண்டமான…

    செப்டம்பர் 20, 2022
  • தேசபக்தியிலும் சிதம்பரத்திற்கு தனி இடமுண்டு.

    ஆன்மீகத்தில் முக்கியத்துவம் பெற்றது போல் தேசபக்தியிலும் சிதம்பரத்திற்கு தனி இடமுண்டு. சிதம்பரம் அருகே கீழ மூங்கிலடி கிராமத்தில் இருந்த காந்தி ஆசிரமத்திற்கு காந்தியடிகள் வந்து சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அதேபோன்று சிதம்பரத்தில் நந்தனார் கல்வி நிறுவனங்களை உருவாக்கிய சுவாமி சகஜானந்தா 1934 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி காந்தியடிகளை அழைத்து வந்து சிதம்பரம் ஓமகுளம் பகுதியில் அவரது திருக்கையினால் சிவலோகநாதர் சிவாலயத்திற்கு அடிக்கல் நாட்ட செய்து பெருமை சேர்த்துள்ளார்.தற்போது அந்த பழமை வாய்ந்த கோயில் கருங்கல்…

    ஆகஸ்ட் 15, 2022
  • சிதம்பரமாக மாறிய தில்லைவனம்.

    ஆதிகாலத்தில் சிதம்பரத்தில் தில்லை என்ற ஒரு வகை மரம் நிறைந்து வனமாக இருந்ததால் தில்லை வனம் என பெயர் பெற்றது. மருத்துவ குணம் வாய்ந்த இந்த தில்லை மரம் சிதம்பரம் நடராஜர் கோயிலின் தலவிருட்சமாக உள்ளது. சிதம்பரம் பகுதியில் தில்லை மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டதால் ஊர் பெயரே தில்லை என பெயர் பெற்றது. பின்னர் இந்த ஊர் சித்-அம்பரம் என்பது மருவி சிதம்பரமாகியது. சித் என்றால் அறிவு, அம்பரம் என்பது வெட்டவெளி. இதனால் நாளடைவில் தில்லை…

    ஆகஸ்ட் 7, 2022
  • சிதம்பரம் அருகே வீணாக கடலில் கலக்கும் காவிரி நீர்.

    கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் தற்போது மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு! மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீர் திருச்சி மாவட்டம் கல்லணை, தஞ்சை மாவட்டம் கீழணை வழியாக கடலூர் மாவட்டம் கடைமடை பகுதியாக உள்ள கொள்ளிடம் ஆற்றிற்கு காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் அதிக…

    ஆகஸ்ட் 6, 2022
  • சிதம்பரத்தில் தரிசிக்க வேண்டிய கோயில்கள்

    சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் கோயில் என்றாலே அது சிதம்பரத்தை தான் குறிக்கும். பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக (Aether)விளங்குவது சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில். இங்கு நடராஜபெருமான் ஆனந்த தாண்டவ கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதே கோயிலில் மற்றொரு புறத்தில் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சயன கோலத்தில் காட்சி தருகின்றார். வேறு எங்கும் இல்லாத அதிசயமாக  நடராஜர் கோயிலில் ஒரே இடத்தில் நின்று நடராஜரையும், பெருமாளையும் வழிபடலாம். சிதம்பரம் சென்றால் நடராஜரையும், பெருமாளையும் வழிபட்டு…

    ஆகஸ்ட் 4, 2022
  • சிதம்பர ரகசியம்

    ரகசியமான விஷயம் ஏதேனும் இருந்தால் பேச்சுவாக்கில் அது சிதம்பர ரகசியம் என்பார்கள். சிதம்பரத்தின் சிறப்புகளில் மிக முக்கியமானது சிதம்பர ரகசியம். உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர் அருள் பாலித்து வருகிறார். ரகசியம் சிதம்பரம் நடராஜர் கோயில் சித் சபையில் அருள் பாலித்து வரும் நடராஜரின் இடது பக்கத்தில் சிவகாமசுந்தரி அம்பிகையும், வலது பக்கத்தில் சிதம்பர ரகசியமும் அமைந்துள்ளது. சிதம்பர ரகசியம் இறைவனின் மூன்று நிலைகளில் ஒன்றான அருவநிலையை குறிக்கும் இத்தலம்…

    ஆகஸ்ட் 3, 2022
←Previous Page
1 … 6 7 8

தில்லை கீதம்