Skip to content

தில்லை கீதம்

Illustration of a bird flying.
  • கற்பூர ஆரத்தியில் ஒளிபிழம்பாய் காட்சி தரும் ரத்தின சபாபதி (நடராஜர்).

    கோயில் என்றாலே பொருள்படுவதும், ஆனந்த நடராஜ மூர்த்தி எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவதும், வேண்டும் வரங்களை உடன் அருளுவதும், தரிசித்தால் முக்தி தருவதும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவதும், சித்சபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தருவதும், சிதம்பர ரகசியம் விளங்குவதும், அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை தொழுதெற்றும் தலமாக விளங்குவதும் ஆகிய சிதம்பரம் தலம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது. தினமும் ஆறு காலம் பூஜை! சிதம்பரம் நடராஜர் கோயிலில் தினமும்…

    ஜூன் 20, 2026
  • சிதம்பரம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் தலைக்குளம் கோயில்!

    உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயில் சிதம்பரத்தில் உள்ளது. சிதம்பரத்தை சுற்றி பழமையும், தொன்மையும் வாய்ந்த பல கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிதம்பரத்தை அடுத்துள்ள புவனகிரி வட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் தலைக்குளம் கிராமம். இக்கிராமத்தில் ஸ்ரீ உமயபார்வதி சமேத திருமூலநாதர் (ஸ்ரீ மூலநாதர்) திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் (தில்லையில்) சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆதிமூலநாதர் போன்றே ஸ்ரீ மூலநாதராக அருள் பாலிக்கிறார்‌. இந்த பழமை வாய்ந்த கோயில் அமைந்துள்ள தலைக்குளம்…

    பிப்ரவரி 14, 2026
  • பேராசிரியர் பெயர் சூட்டப்பட்ட புதிய வகை நண்டு!

    புதியதாக அடையாளம் காணப்பட்ட நண்டுக்கு கடல் வாழ் உயிரினங்கள் குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஒரு பேராசிரியரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது அல்லவா? அரிசி மணியை விட சிறிய நண்டு வகை கண்டறியப்பட்டுள்ளது. லட்சத்தீவில் அகத்தி தீவின் பவளப் பாறை (coral reef) சூழலிலிருந்து, அரிசி மணியை விட சிறியதாக சுமார் 3 மில்லிமீட்டர் அளவுள்ள ஒரு புதிய நண்டு இனம் கண்டறியப்பட்டுள்ளது. லட்சத்தீவில் மக்கள் வசிக்கும் 10 தீவுகளில்  அகத்தி தீவும் ஒன்றாகும். இத்தீவு…

    பிப்ரவரி 10, 2026
  • சிதம்பரம் நடராஜர் கோயில் திருவிழா!அற்புத நிகழ்வுகள்!!

    கோயில் என்றாலே சிதம்பரத்தை தான் குறிக்கும். அந்த அளவிற்கு மிகவும் புகழ் பெற்றது ஸ்ரீ நடராஜர் கோயில். இக்கோயிலில் ஆண்டுக்கு இருமுறை திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் மிகச் சிறப்பாக நடைபெறும். இத் திருவிழாக்களின் போது கோயிலில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பத்து தினங்கள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். 10 தினங்களும் பல்வேறு மஞ்சங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு…

    ஜூலை 9, 2025
  • வசிஷ்ட முனிவர் வழிபட்ட ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்!

    தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலை சுற்றி ஏராளமான பழமை வாய்ந்த கோயில்கள் உள்ளன. அப்படி  ஒரு கோயில் தான் சிதம்பரம் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பிரசன்னநாயகி சமேத திருக்களாஞ் செடியுடையார் கோயில். இந்த கோயிலை பிரம்மபுரீஸ்வரர் கோயில் என்றும் அழைப்பார்கள். அடிமுடி காண சிவனை, முடி கண்டதாக பிரம்மா பொய் கூற, அதனால் படைப்பு தொழிலில் களங்கம் ஏற்பட, சிவனை பூஜித்து,பேறு பெற்ற இடம் திருக்களாஞ் செடியுடையார் கோயில். ‘களா’…

    மே 20, 2025
  • கார்த்திகை தீபத்தை காண வரும் சித்தர்கள்!

    பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் இது. திருவண்ணாமலை ஜோதி தரிசன காட்சி கிட்டுமாயின் அந்த ஒலிக்கதிர் உடம்பின் வழியே ஆன்மாவை ஊடுருவி கர்ம வினைகளை அழிக்கும். மலையின் உள்ளிருந்து சிவந்த ஜோதி கதிர்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அது புண்ணிய ஆத்மாக்களுக்கு கிடைக்கின்ற அருட்காட்சியாகும்.திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து நமசிவாய என்று…

    டிசம்பர் 8, 2024
  • சனி கிரக தோஷம் நீக்கும் திருவாலங்காடு வடராண்யேஸ்வரர் திருக்கோயில்!

    முற்காலத்தில் திருவாலங்காடு ஆலமரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இக்காட்டில் ஒரு ஆலமரத்தின் கீழ் சிவபெருமான் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். இக்கோயில் மூலவர் பெயர் வடராண்யேஸ்வரர்.(வடம் -ஆலமரம், ஆரண்யம்-காடு, ஈஸ்வரர்-சிவபெருமான்). இதனால் இக் கோயில் மூலவருக்கு வடராண்யேஸ்வரர் என்ற திருப்பெயர் வழங்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் இறைவன் ஊர்த்துவ தாண்டவம் நடனமாடியதால் ஊத்துவ தாண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார். பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 15-வது தலமாக விளங்குகிறது திருவாலங்காடு. திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் ஒரு தலமாக…

    நவம்பர் 3, 2024
  • வராக அவதாரத்தில் பூவராகப் பெருமாள்!

    ஸ்ரீ பூவராகப் பெருமாள் கோயில் என்பது தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதார கோலத்தில் மூலவர் காட்சி தருகிறார். இத்தகைய கோலத்தை தரிசிப்பது மிகவும் அரிதாகும்.ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராகப் பெருமாள் திருக்கோயில் வெள்ளாற்றின் தென்கரையில் விருத்தாசலத்திற்கு தென்கிழக்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரத்தில் இருந்து 36 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. விருத்தாசலம்,சிதம்பரத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன.ஸ்ரீரங்கம், திருப்பதி,…

    அக்டோபர் 16, 2024
  • மயூரநாதரை தரிசித்தால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும்!

    தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில்,மயிலாடுதுறை நகரில் மையமாக அமைந்துள்ளது ஸ்ரீ மயூரநாதர் கோவில். மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத்தலங்களில் அமைந்துள்ள சிவஸ்தலமாகும்.புராண காலத்தில் மயிலாடுதுறை தென்மயிலை, பிரம்மபுரம்,சிகண்டிபுரம் என அழைக்கப்பட்டுள்ளது. இத்தல இறைவன் மயூரநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலித்து வருகின்றார்.பழமை வாய்ந்த இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. சென்னையில் இருந்து மயிலாடுதுறை 256 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து…

    அக்டோபர் 15, 2024
  • திருவாசகத்தை மாணிக்கவாசகர் பாட சிவபெருமான் கைப்பட எழுதிய இடம் தில்லை.

    “திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” எனக் கூறப்படுவதுண்டு.திருவாசகம் என்னும் தேன் அமுதை மாணிக்கவாசகர் பாட அதனை வேதியர் உருவில் வந்த சிவபெருமான் எழுதிய இடம் தில்லை திருப்பெருந்துறை. பாண்டிய நாட்டின் வைகறை ஆற்றின் கரையில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர் மாணிக்கவாசகர். இவரது இயற்பெயர் வாதவூரார் என்பதாகும். சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராக போற்றப்படுபடுபவர் மாணிக்கவாசகர். மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் இந்த சிறப்புக்குரிய பெரும் படைப்பாகும். பாண்டிய மன்னன் அரசவையில் அமைச்சர் பதவி வகித்த வாதவூரார்!…

    அக்டோபர் 2, 2024
1 2 3 … 9
Next Page→

தில்லை கீதம்