Category: Uncategorized

  • சிதம்பரம் அருகே பிரசித்தி பெற்ற கன்னி திருவிழா. கிராம மக்கள் கும்மியடித்து கொண்டாட்டம்.

    சிதம்பரம் அருகே பிரசித்தி பெற்ற கன்னி திருவிழா. கிராம மக்கள் கும்மியடித்து கொண்டாட்டம்.

    காலம் மாறினாலும் பாரம்பரிய வழக்கப்படி சில கிராமங்களில் தொன்றுதொட்டு திருவிழாக்கள் கைவிடப்படாமல் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. திருமணமாகாத இளைஞர்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு கிராமத்தில் பல தலைமுறைகளாக கன்னி திருவிழா என்ற பெயரில் ஒரு விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் பாரம்பரிய வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் கன்னி திருவிழா உற்சாகமாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடப்படுவது வழக்கம். விவசாயம் செழித்து மக்கள் வளமாக இருக்க…

  • வெளிநாட்டு பக்தர்களை கவர்ந்த சிதம்பரம் நடராஜர் கோயில்.

    வெளிநாட்டு பக்தர்களை கவர்ந்த சிதம்பரம் நடராஜர் கோயில்.

    ஐம்பூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்குவது சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில். இக்கோயிலானது மிகவும் தொன்மை வாய்ந்ததும் வரலாற்று சிறப்பு மிக்கதுவமாகும். சிவ தலங்களில் முதன்மையானது என்ற பெருமையை சிதம்பரம் நடராஜர் ஆலயம் பெற்றுள்ளது. சிவ வழிபாட்டை தொடங்குபவர்கள் சிதம்பரத்திலிருந்து தொடங்குவது நல்லது என்பார்கள். இது மட்டுமல்ல கோயில் என்றாலே அது சிதம்பரம் தலத்தை தான் குறிக்கும் என்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொற்கூறையின் கீழ் ஆனந்த தாண்டவ கோலத்தில் அம்பிகையுடன் அருள்பாளித்து வருகின்றார். ஒரு காலை தூக்கி…

  • சிதம்பரம் அருகே  பொங்கலை முன்னிட்டு கரும்புகள் அறுவடை தீவிரம்

    சிதம்பரம் அருகே  பொங்கலை முன்னிட்டு கரும்புகள் அறுவடை தீவிரம்

    பொங்கல் பண்டிகை என்றாலே இயற்கையாகவே இனிப்பு சுவையுள்ள  கரும்புகள் தான் ஞாபகத்திற்கு வரும்.. தமிழகத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பன்னீர் கரும்புகள் என கூறப்படும் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சிதம்பரம் அருகே கடவாச்சேரி, பெராம்பட்டு, வேளக்குடி, அகரநல்லூர், பழையநல்லூர், எருக்கன் காட்டுபடுகை, மற்றும் வீராணம் ஏரிக்கரையில் உள்ள வாழக்கொல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் கரும்புகள் சாகுபடி…

  • மண்பாண்ட தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் கிராமம்!

    மண்பாண்ட தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் கிராமம்!

    பேருந்துகளில் கிராம பகுதிகளில் செல்லும் போது மண் சட்டியில் குழம்பு வைக்கும் வாசனை காற்றில் வரும் போது நம் மூக்கை துளைப்பதோடு நம் பசியை தூண்டும். மண்பாண்டங்களில் செய்யும் பொருட்களுக்கு வாசமும்,ருசியும் அதிகம். இன்றும் கிராமங்களில் நிறைய குடும்பங்கள் மண் பாண்டங்களை உபயோகப்படுத்தி சமைத்து வருகின்றனர். தமிழகத்தில் கிராமபுறங்களில் உள்ள உணவகங்களில் மண் அடுப்புகளில் மண்பாண்டங்களை கொண்டு சமைப்பதை காணலாம். தற்போது பேப்பர் தட்டுகள், பேப்பர் கப்புகள், அலுமினியம் மற்றும் சில்வர் பாத்திரங்களின் உபயோகம் அதிகரிப்பால் மண்பாண்ட…

  • பக்தர்களை காண ஆண்டுக்கு இருமுறை கோயிலில் இருந்து வெளியே வரும் நடராஜர்.

    பக்தர்களை காண ஆண்டுக்கு இருமுறை கோயிலில் இருந்து வெளியே வரும் நடராஜர்.

    மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர்.இதுவே மருவி ஆருத்ரா எனப்படுகிறது. ஆகாய ஸ்தலமான உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொற்கூறையின் கீழ் ஆனந்த தாண்டவக்கோலத்தில் நடராஜபெருமான் சிவகாமசுந்தரி அம்பிகையுடன் அருள் பாலித்து வருகின்றார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் நடராஜர் கோயிலில் ஆண்டு தோறும் இரு…

  • இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரம்.

    இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரம்.

    உலகின் வெப்பம் மற்றும் மித மண்டலப் பகுதியில் உள்ள சதுப்பு நிலக்காடுகள், கடல் கரையோரங்களில் கானப்படும் சதுப்பு நிலக்காடுகளில் தோன்றும் தாவரங்கள் சதுப்புநில தாவரங்கள் (Mangrove forest) என அழைக்கப்படுகின்றன. இவை அலையாத்தி காடுகள் என்றும் கூறப்படுகிறது.கடும் புயல் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை தடுக்கக்கூடிய சக்தி சதுப்பு நிலக்காடுகளுக்கு உள்ளது. அந்த வகையிலே உலகிலேயே கொல்கத்தாவில் உள்ள சுந்தர்பன் அலையாத்தி காடுகள் மிகப்பெரியது என கூறப்படுகிறது. தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம்…

  • சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் களைகட்டும் ஐப்பசிப் பூரவிழா.

    பூலோக கயிலாயம் எனவும் கோயில் எனவும் போற்றப்படுவது பெரும்பற்றபுலியூர் என்னும் சிதம்பரமாகும். ஆகாய ஸ்தலமான சிதம்பரத்தில் திருச்சிற்றம்பலத்தில் சிவபெருமான் ஆனந்தத் திருக்கூத்தினை எக்காலத்திலும் நிகழ்த்தியருள்கின்றார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு தனித்த பெரிய கோயில் உள்ளது. இக்கோயில் வடக்கு கோபுரம் செல்லும் வழியில் நூற்றுக்கால் மண்டபத்தையடுத்து சிவகங்கை தீர்த்தத்தின் மேல் கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் இரண்டு பிரகாரங்களை உடைய பெரிய கோயிலாக அமைந்துள்ளது. இது கி.பி.1118-1136ம் ஆண்டு வரை ஆட்சி புரிந்த விக்கிரம சோழன் காலத்தில்…

  • திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில்.

    உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் விஷ்ணுவையும், சிவபெருமானையும் ஒரே இடத்தில் நின்று வழிபடலாம். வேறு எந்த கோயிலிலும் இந்த அதிசயத்தைக் காண முடியாது. அம்பலத்தில் ஆடும் தில்லைக் கூத்தனையும், யோகசயனத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாளையும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நின்று வழிபடலாம் தில்லை திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டு திருப்பதிகளில் 23வது திருப்பதியாக உள்ளது. பிராட்டியைத் திருமார்பில் கொண்ட பெருமானை சிந்தையில் வைப்பதற்காக காயையும்,…

  • துர்வாசருக்காக நடனமாடியவர் கற்பக விநாயகர்.

    பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய(Aether) ஸ்தலமாக விளங்குவது புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில். இக்கோயிலில் நடுநாயகமாக ஆடல்வல்லான் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை. சிதம்பரம் கோயிலில் நான்கு கோபுர வாயில்கள் வழியேயும் சென்று நடராஜரை தரிசனம் செய்ய முடியும். நான்கு கோபுரங்களின் வழியேயும் வருகை தரும் போது முதற்கண் முழு முதற்கடவுளாகிய விநாயகரை வழிபடும் வகையில் அமைந்த ஒரு அற்புத தலம் சிதம்பரம்.…

  • விற்பனையில் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன் நாவல்.

    தமிழ் சினிமாவில் சரித்திர படங்கள் வந்து வெகு காலமாகிவிட்டது.தெலுங்கில் இருந்து பாகுபலி திரைப்படம் வந்தபின் தமிழ் ரசிகர்களுக்கும் அதைப் போல அதைவிடச் சிறந்த ஒரு படம் தமிழிலும் வராதா? என்ற ஏக்கம் இருந்தது. அதனை முற்றிலுமாக தீர்த்து வைத்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம். எவ்வளவோ பேர் முயற்சித்தும் முடியாத நிலையில் கல்கியின் புகழ்ப்பெற்ற சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இயக்கியுள்ளார். ஏ.ஆர்‌.ரகுமான் இசையில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார்,பார்த்திபன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் ஐஸ்வர்யா…