-
10ம் வகுப்பு கல்வி தகுதியில் சுரங்கப் பொறியியல் பட்டயப்படிப்பு. காத்திருக்கிறது மத்திய அரசு பணி.
வெறும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறிருந்தால் சுரங்கப் பொறியியல் பட்டயப் படிப்பு(Diploma) படிக்கலாம். இந்த படிப்பிற்கு மத்திய அரசு பணி உள்ளிட்ட ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. சுரங்கப் பொறியியல் என்றால் என்ன? சுரங்கம் என்பது பூமியில் உள்ள கனிமங்களை ஆய்வு செய்து அகற்றுவதை உள்ளடக்கிய பொறியியல் துறை. சுரங்கம் மனித குலத்தின் பழமையான மற்றும் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும். ஏனெனில் அது நம்மைச் சுற்றியுள்ள உலகின் மூலப்பொருட்களை வழங்குகிறது மற்றும் விவசாயத்தை போலவே…
-
தில்லை எல்லையில் அருள்பாலித்து வரும் தில்லைக் காளியம்மன்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அன்னை ஆதிபராசக்தி இப்பரந்த உலகின் அஷ்ட திக்கிலும் எண்ணுதற்கரிய திருத்தலங்களில் கோவில் கொண்டுள்ளார். காஞ்சியில் காமாட்சி கருணை வடிவமாகவும்,காசியில் விசாலாட்சி அருளே வடிவமாகவும், மதுரையில் மீனாட்சி அரசாட்சி கொண்டமையாகவும் விளங்குகின்றனர். திருச்சியில் மாரியம்மனாகவும், திருவேற்காட்டில் கருமாரியம்மனாகவும், திருவொற்றியூரில் வடிவுடை நாயகியாகவும், சிதம்பரத்தில் சிவகாமியாகவும்,தில்லைக் காளியாகவும், தில்லையம்மனாகவும் கோவில் கொண்டுள்ளார் பார்வதிதேவி. ஆதிகாலத்தில் சிதம்பரம் தில்லை செடிகள் புதர் போல் வளர்ந்து தில்லை வனமாக விளங்கியது. தில்லையின் நடுநாயகனாக விளங்கும் பொன்னம்பலத்தான் வீற்றிருக்கும்…
-
வரலாற்றுப் பெருமைகள் கொண்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம். சென்னையிலிருந்து சுமார் 217 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரமும், பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலும் பல்கலைக்கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் ரயில் நிலையத்தின் மிக அருகாமையில் உள்ளது. சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு பேருந்து வசதி உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ மூலம்…
-
கேட்ட வரம் தரும் கீழத்தெரு மாரியம்மன்.
பூலோக கைலாயம் என வர்ணிக்கப்படும் சிதம்பரம் முன்னொரு காலத்தில் தில்லை வனமாக காட்சியளித்தது. அசுரர்கள் தில்லை நகருக்குள் நுழையாமல் இருக்க தெற்கே வெள்ளந்தாங்கி அம்மனும், மேற்கே எல்லையம்மனும்,வடக்கே தில்லையம்மனும்,கிழக்கே மாரியம்மனும் இருந்து காத்தருள சிவபெருமான் கட்டளையிட்டதாக புராண வரலாறு கூறுகிறது. அன்று முதல் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே அருள்பாலித்து வரும் மாரியம்மனுக்கு கீழத்தெரு மாரியம்மன் என பெயர் பெற்றது. இக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கூறப்படுகிறது. கருணையின் உருவமே, கலைகளின் வடிவமே எனப்…
-
சிவபுரி பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைப்பதாக ஐதீகம்.
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே அமைந்துள்ளது சிவபுரி கிராமம். இக்கிராமத்தில் வேதநாயகி சமேத ஸ்ரீ பால்வண்ணநாதர் கோவில் உள்ளது. இந்த ஊரின் புராண பெயர் திருக்கழிப்பாலை என கூறப்படுகிறது. கொள்ளிடக் கரையில் உள்ள இக்கோவிலின் தீர்த்தம் கொள்ளிடம் தான். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போனதால் வென்னிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது.…
-
27 படிப்புகளுக்கு யுஜிசி அனுமதி. மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ள அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககம் தனியாக செயல்பட்டு வருகின்றது.1979ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு(UGC) அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி பாடத்திட்டங்கள் ஏற்புடையது அல்ல என அறிவித்தது.இதனால் கடந்த 2015ம் ஆண்டு முதல் தொலைதூரக் கல்வியில் தடை ஏற்பட்டது. இதனையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகம் நீதிமன்ற அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து மாணவர்…
-
பெருக்கெடுத்து வரும் காவிரி நீரை வரவேற்கும் ஆடிப்பெருக்கு விழா.
ஆடிப்பெருக்கென்று சோழ நாட்டு நதிகலெல்லாம் வெள்ளம் இரு கரையும் தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளில் இருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக்கொண்டு அலை மோதிக் கொண்டிருப்பது வழக்கம். “வடகாவேரி” என்று பக்தர்களாலும், “கொள்ளிடம்” என்று பொதுமக்களாலும் பெயரிடப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீரநாராயணன் ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது என புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலில் கல்கியால் ஆடிப்பெருக்கு விழா குறித்து…
-
திருநீலகண்ட நாயனாரை இளமைப் பெற செய்த ஸ்தலம்.
சிவத்திருத்தலங்களுள் சிறந்தது சிதம்பரம் ஸ்தலம்.சிதம்பரம் நடராஜர் கோயிலை சுற்றி பல பழமை வாய்ந்த கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிதம்பரம் மையப்பகுதியில் அமைந்துள்ள திருப்புலீச்சுரம் கோயில். சிதம்பரம் ஸ்தலத்திற்குரிய தீர்த்தங்கள் பத்து. இதில் நான்காவது தீர்த்தமாகிய வியாக்ரபாத தீர்த்தம் இத்திருக்கோயிலின் முன்பு உள்ள திருக்குளம்.திருஞானசம்பந்தரால் திருப்புலீச்சுரம் என்று பாடப்பட்ட திருக்கோயில் 7ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும். வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் ஆன்மார்த்தமாக பூஜை செய்த தலம் திருப்புலீச்சுரம் கோயில். இக்கோயில் மூர்த்தி,தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்படையுது.சிதம்பரம் நடராஜர்…
-
முட்செடி இழுத்தது! வானத்தில் கருடன் வட்டமிட்டது!! பல்கலைக்கழகம் மலர்ந்தது.
லட்டச்கணக்கான இளைஞர்களின் அறிவுக்கண்களை திறந்து கல்வி புரட்சி ஏற்படுத்திய அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவான கதை மிகவும் சுவாரசியமானது. தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே செட்டிநாடு புகைவண்டி நிலையத்தின் ஊடே கானாடுகாத்தான் என்ற புகழ்பெற்ற ஊர் உள்ளது. கட்டிடக்கலைக்கு உலகப் புகழ் பெற்ற ஊராகும். இவ்வூரில் திரைகடல் ஓடி திரவியம் சேர்த்து அப்பொருளை இறைவனுக்கு ஆலயம் அமைத்து மகிழும் தனவான்கள் பலர் உள்ளனர்.அம்மரபு வழி வந்த அண்ணாமலை செட்டியார் 1910ம் ஆண்டில் பிரிட்டனில் தங்கி கேம்பிரிட்ஜ் மற்றும்…
-
ஆகாய தலத்தில் ஆனந்த திருநடனம் புரியும் நடராஜர்.
பொதுவாக கோயில் என்று சொன்னாலே திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலை தான் குறிக்கும். ‘சைவர்கள் கோயில்’ என்றாலே இத்தலத்தையே குறிக்கப் பெறும் அளவிற்குத் தனிப்பெருஞ் சிறப்புடையதாகும்.பஞ்சபூத தலங்களில் இது ஆகாய தலமாக விளங்குகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலும் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த கோயில் அமைந்துள்ளது. சென்னைக்கு தெற்கே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. மதுரையில்…