Category: Uncategorized

  • தில்லை நடராஜர்,திருவாரூர் தியாகராஜர்! அபூர்வ ஒற்றுமைகள்!!

    சைவ சமயப் பேருலகின் இரண்டு ராஜாக்களான தில்லை நடராஜருக்கும், திருவாரூர் தியாகராஜருக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்ப்போம். தில்லை நடராஜர்,திருவாரூர் தியாகராஜர் ஆகிய இருவரும் ஆதிரை நாளில் விழா காண்பவர்கள். திருவாரூரில் நடைபெற்ற திருவாதிரை விழாவின் சிறப்பை அப்பர் அடிகள் பதிகமாகவே பாடியுள்ளார். தில்லை நடராஜர் திருவாதிரைக்கு முன்பு,தேர் ஏறி வலம் வந்து ராஜசபையில் அபிஷேகம் கண்டு சித்சபைக்கு எழுந்தருள்கிறார். தில்லை நடராஜர்திருவாரூர் தியாகராஜர் இருவருமே தேரில் மட்டும்வலம் வருபவர்கள்.அதன் பிறகு இருவருக்கும் பெரிய மகாபிஷேகம் நடைபெறுகிறது. தில்லை…

  • கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தங்கள்!

    தமிழ்நாட்டில் கங்கைக்கு நிகரானபுண்ணிய தீர்த்தங்கள் நிறைய உள்ளன. அவற்றில் நீராடினால் கங்கையில் நீராடிய முழு பலனை பெறலாம்.காசி என்றதும் நினைவிற்கு வருவது கங்கை நதி.வாழ்வில் ஒரு முறையாவது கங்கையில் நீராட வேண்டும் என்பது இந்துக்களின் ஆவல்.புனித கங்கையில் நீராடினால் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்பது நமது நம்பிக்கை. காசிக்குச் சென்று கங்கையில் நீராட வசதி இல்லாதவர்கள் தமிழகத்தில் கங்கைக்கு நிகரான தீர்த்தங்களில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன்கள் கிட்டும் என கூறப்படுகிறது.அந்த வகையில்…

  • ஆச்சாள்புரம் கோயிலுக்கு சென்றால் திருமணம் தடை நீங்கும்!

    காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 5-வது தலம் திருநல்லூர் பெருமணம் என்று தேவாரம் பாடப்பெற்ற பெருமை பெற்ற இத்தலம், இன்றைய நாளில் ஆச்சாள்புரம் என்று அழைக்கப்படுகிறது. இக் கோயிலில் திருவெண்ணீற்று உமையம்மை சமேத சிவலோக தியாகேசர் அருள்பாலித்து வருகின்றார்.இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்துடன் வருகை தந்து “கல்லூர்ப் பெருமணம்” என்ற பதிகத்தைப் பாடினார். தனது வாழ்நாளில் சம்பந்தர் பாடிய “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” என்று தொடங்கும் கடைசிப் பதிகமும் இத்தலத்தில்தான் பாடப்பெற்றது.சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும்…

  • பாசுபதேஸ்வரரை வழிபட்டால் திருமண தடை நீங்கும்!

    தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் முதல் தலம் என்ற சிறப்புக்குரியது சிதம்பரம் நடராஜர் கோவில். இரண்டாவது தலமாக சிதம்பரம் அருகே உள்ள திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோவில் கூறப்படுகிறது. ஆதி காலத்தில் சிதம்பரம் தில்லை வனமாகவும், திருவேட்களம் மூங்கில் வனமாகவும் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் அமைந்துள்ளது திருவேட்களம். இங்கு பழமை வாய்ந்த பாசுபதேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் நல்லநாயகி சமேத ஸ்ரீ பாசுபதேஸ்வரர் அருள்பாலித்து வருகின்றார்.இக்கோயில் குறித்து சம்பந்தர் அப்பர்…

  • நார் சத்து நிறைந்தது நாவல் பழம்.

    இனிப்பு, புளிப்பு என இரண்டு சுவையும் கலந்தது நாவல் பழம். இதில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. தற்போது நாவல் பழம் சீசனாக இருப்பதால் பலரும் அதனை ருசிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். நாவல் பழத்தை எல்லோரும் சாப்பிடலாம். நாவல் பழத்தில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் ஜாம்போலின் உள்ளது. இது மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதை கட்டுப்படுத்த உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் நாவல் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை…

  • ஆடிமாதம்

    ஆடி மாதம் என்பது இந்து மத தெய்வங்களை வழிபட முக்கியமான மாதமாகும். சில தமிழ் மாதங்கள் சைவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும், சில மாதங்கள் வைணவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும் இருக்கும். ஆனால் இரண்டு சமய தெய்வங்களுக்குமே உகந்த மாதம் என்றால் அது ஆடி மாதம்தான். தெய்வீகமான இம்மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் சரியான முறையில் வழிபாடு செய்தால் பூரண நலனும், செல்வமும் வீட்டில் நிலையாக பெருகி வளம் தரும். ஆடி வெள்ளி! ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு உகந்த…

  • குலத்தினைக் காக்கும் தெய்வம் குலதெய்வம்.

    நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிகள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குலதெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழி பாதை. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால்,…

  • ஆனந்த வாழ்வை தரும் ஆனித் திருமஞ்சனம்!

    ஆனி மாதத்தை, நீண்ட பகல் பொழுது கொண்ட மாதம் என்றும், சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பகல் பொழுது நீளும் என்றும் நமது முன்னோர்கள் சொல்வதுண்டு. இப்படியான பெருமை மிகுந்த ஆனி மாத்தில், ஆனி உத்திர விரதமே பிரசித்தம். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனி மாதத்தில் ஆணி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் பிரசித்தி பெற்றவை! இதில் ஆனித் திருமஞ்சனத்தின் அற்புதங்களை பார்ப்போம்! திருமஞ்சனம் என்றால் மகாபிஷேகம்! திருமஞ்சனம் என்றால், மகா அபிஷேகம் என்பது…

  • பரங்கிப்பேட்டை கலங்கரை விளக்கம்.

    தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் உள்ள கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பரங்கிப்பேட்டை கடலோரப்பகுதியில் கலங்கரை விளக்கம் செயல்பட்டு வந்தது.இந்த கலங்கரை விளக்கத்தின் மேல் ஏறி சுற்றுலா பயணிகள் வங்காள விரிகுடா கடலின் அழகு மற்றும் கடலில் ஆர்ப்பரிக்கும் அலைகள் ஆகியவற்றையும், பரங்கிப்பேட்டை பிச்சாவரம் பகுதியில் உள்ள அடர்ந்த சுரப்பண்ணை காடுகளையும் அங்கிருந்து கண்டு ரசித்து வந்தனர்.ஒவ்வொரு வாரமும் ஏராளமான மக்கள் கலங்கரை விளக்கத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் 2004ம் ஆண்டு…

  • பிரபலமாகும் டிராகன் பழம்.(DRAGON FRUIT)

    தற்போது பழக்கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டிகளில் ரோஸ் மற்றும் சிவப்பு கலரில் சப்பாத்திக்கள்ளி போல காணப்படும் பழம் பிரபலமாக விற்கப்படுகிறது. இதன் பெயர் டிராகன் பழம்(Dragon fruit)என கூறப்படுகிறது. இது கள்ளியின தாவரத்தில் விளையும் பழமாகும்.இனிப்பு குறைவாகவும், சத்துள்ளதாகவும் கருதப்படும் டிராகன் பழத்தின் சுவை சிலருக்கு பிடிக்கவில்லை என்றாலும் இன்று உலகம் முழுவதும் உடல் ஆரோக்கியத்திற்காக விரும்பி சாப்பிடும் பழமாக டிராகன் பழம் பிரபலமாகி வருகிறது. உலகில் வெப்ப மண்டல பகுதிகளில் இப்பழம் பயிரிடப்படுகிறது. இந்த பழம் முற்றிலும்…