Category: Articles

  • முட்செடி இழுத்தது! வானத்தில் கருடன் வட்டமிட்டது!! பல்கலைக்கழகம் மலர்ந்தது.

    லட்டச்கணக்கான இளைஞர்களின் அறிவுக்கண்களை திறந்து கல்வி புரட்சி ஏற்படுத்திய அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவான கதை மிகவும் சுவாரசியமானது. தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே செட்டிநாடு புகைவண்டி நிலையத்தின் ஊடே கானாடுகாத்தான் என்ற புகழ்பெற்ற ஊர் உள்ளது. கட்டிடக்கலைக்கு உலகப் புகழ் பெற்ற ஊராகும். இவ்வூரில் திரைகடல் ஓடி திரவியம் சேர்த்து அப்பொருளை இறைவனுக்கு ஆலயம் அமைத்து மகிழும் தனவான்கள் பலர் உள்ளனர்.அம்மரபு வழி வந்த அண்ணாமலை செட்டியார் 1910ம் ஆண்டில் பிரிட்டனில் தங்கி கேம்பிரிட்ஜ் மற்றும்…

  • ஆகாய தலத்தில் ஆனந்த திருநடனம் புரியும் நடராஜர்.

    பொதுவாக கோயில் என்று சொன்னாலே திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலை தான் குறிக்கும். ‘சைவர்கள் கோயில்’ என்றாலே இத்தலத்தையே குறிக்கப் பெறும் அளவிற்குத் தனிப்பெருஞ் சிறப்புடையதாகும்.பஞ்சபூத தலங்களில் இது ஆகாய தலமாக விளங்குகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலும் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த கோயில் அமைந்துள்ளது. சென்னைக்கு தெற்கே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. மதுரையில்…

  • திருஞானசம்பந்தர் அவதரித்த திருத்தலம் சீர்காழி.

    பிரம்மபுரம்,வேணுபுரம் முதலிய பன்னிரு திருப்பெயர்களைப் பெற்றதும், திருஞானசம்பந்தப் பெருமான் திருவவதாரம் செய்து உமையம்மை அளித்த சிவஞானப்பாலமுதுண்டு உலகமுய்ய தேவாரம் அருளிச் செய்யத் தொடங்கியதுமாகிய திருத்தலம் சீர்காழி.சோழ நாட்டில் காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தாலுகாக்களில் ஒன்றாய் விளங்குவது சீர்காழி. தருமபரம் ஆதினத்திற்கு சொந்தமான 27 தேவஸ்தானங்களில் ஒன்றாய் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது இத்திருக்கோயில். பிரம்மன் வழிபட்டதால் பிரம்மபுரம் எனவும், இறைவன் மூங்கில் வடிவமாகத் தோன்றி சூரபத்மனுக்கு அருள் செய்தமையால் வேணுபுரம் எனவும், அசுரர்கட்குப் பயந்த தேவர்களின்…

  • திருவாரூரில் அஜபா நடன மூர்த்தியாக திகழும் தியாகராஜர்.

    பஞ்ச பூதங்களே நம்மை ஆள்பவன. இறைவன் பஞ்ச பூதமாகவே இருந்து நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கிறார். இப்பஞ்ச பூதங்கள் இல்லை என்றால், உலகம் இயங்காது. உயிர்கள் கிடையாது. அனைத்திற்கும் மூலக் காரணமே இப்பஞ்ச பூதங்களாகிய நிலம்,நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகள்தான். இவற்றை சிறப்பிக்கும் வகையில் சிவபெருமான் ஐந்து திருத்தலங்களில்,அந்தந்த பூதங்களாக அருளாட்சி செய்து வருகிறார். மண் தலமாகிய நிலத்திற்கு இரு தலங்களை குறிப்பிடுவார்கள். ஒன்று காஞ்சிபுரம், மற்றொன்று திருவாரூர். திருவாரூரில் பிறக்க முக்தி! தில்லையில் இருக்க முக்தி!!திருவண்ணாமலையை…

  • அழியாமல் பாதுகாக்கப்படும் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள்.

    அழியாமல் பாதுகாக்கப்படும் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள்.

    இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வமானது ‘ஆலிவ் ரிட்லி வகை’ ஆமைகள். உலகிலேயே அதிகமாக காணப்படும் ஆமை இனமும் இதுதான். மிகவும் சிறிய உடல் அமைப்பை கொண்டுள்ளது ஆலிவ் ரிட்லி ஆமைகள். பங்குனி மாதத்தில் இவை முட்டையிடுவதால் பங்குனி ஆமைகள் என்று தமிழில் அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் olive Ridley sea turtle என்றும் தமிழில் ஒலிவ நிறச் சிற்றாமை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் zoological name Lepidochelys olivacea எனக் கூறப்படுகிறது. இந்த சிற்றாமைகளால் கடலின்…

  • மனமும், நிறமும் மாறாமல் இருக்கும் வெட்டிவேர் மாலைகள்!சிதம்பரத்தில் பிரபலம்!!

    மனமும், நிறமும் மாறாமல் இருக்கும் வெட்டிவேர் மாலைகள்!சிதம்பரத்தில் பிரபலம்!!

    வெட்டிவேரு வாசம், வெடலப்புள்ள நேசம், பூவுக்கு வாசம் உண்டு,பூமிக்கும் வாசம் உண்டு, வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே, வெட்டி வேரு வாசம் என்ற வைரமுத்துவின் பாடல் வரிகள் வெட்டி வேரை பார்த்தாலே நினைவுக்கு வருகிறது. நறுமணம் வீசும் வெட்டிவேர் மனமும், நிறமும் மாறாமல் இருக்கும் வெட்டிவேர் மாலைகள் நடராஜருக்கு சூட்டப்படுவதால் சிதம்பரத்தில் பிரபலமாக உள்ளது.பூக்கள் மட்டும் தான் வாசனை வீசும் என நாம் நினைக்கிறோம். ஆனால் செடி மட்டுமல்ல. அதன் வேர் கூட வாசனை தருகிறது என்றால்…

  • மாசி மகத்தன்று பெருமாளை வரவேற்கும் இஸ்லாமியர்கள்.

    மாசி மகத்தன்று பெருமாளை வரவேற்கும் இஸ்லாமியர்கள்.

    இறை வழிபாட்டோடு இணைந்த மாதங்களில் சிறப்பு பெற்றது மாசி மாதமாகும். மாசி மகம் என்பது மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாளாகும். இந்த மாசி மகம் இந்துக்களால் விரதம் இருந்து கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்னாளில் கடல், குளம்,ஆறு ஆகிய நீர் நிலைகளில் புண்ணிய நதியான கங்கையும் கலந்திருப்பதாக மக்களிடையே நம்பிக்கை உள்ளது. இதனால் மாசி மகத்தன்று நீர் நிலைகளில் புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். மேலும்…

  • தீரா நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரர்!

    பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிச!ஜபேந் நாமத்ரயம் நித்யம் மஹாரோக நிவாரணம்!!! தையல் நாயகி உடனுறை வைத்தியநாதரின் இந்த அஷ்டகத்தை தினமும் மும்முறை உச்சரித்தால் எப்பேர்பட்ட நோய்களிலிருந்தும் விடுபடலாம் எனக் நம்பப்படுகின்றது. தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அமைந்துள்ளது புள்ளிருக்கு வேளூர் என கூறப்படும் வைத்தீஸ்வரன் கோயில். சீர்காழியில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயில் நவக்கிரக ஸ்தலங்களில் செவ்வாய்க்குரிய ஸ்தலமாக விளங்குகிறது. இந்த…

  • தனிச்சிறப்பு பெற்று விளங்கும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி.

    தனிச்சிறப்பு பெற்று விளங்கும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி.

    சிவ வழிபாட்டு தலங்களில் மிகப் பழமையானதும் உன்னதமானதுமான ஒரு தலமாக சிதம்பரம் விளங்குகிறது. சைவ தத்துவ அடிப்படையிலும், சமய பாரம்பரியத்திலும், பஞ்ச பூதங்களும் சிவனின் அம்சங்களாக கருதப்படுகின்றன. உலக புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆகாச வடிவமாக இறைவன் வணங்கப்படுகிறார். ஆகாசம் என்பது தூய்மையான உணர் அறிவையும், உண்மை அறிவையும் குறிப்பதாகும். இங்கே உள்ள திருக்கோயில் பல்வேறு ஆன்மீக உண்மைகளை சுட்டிக்காட்டும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் நின்றாடும் நடராஜப் பெருமானின் ஆனந்தத் தாண்டவக்…

  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா சிவராத்திரி கோலாகலம்.

    இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும் மகா சிவராத்திரி. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களில் தலையாயது சிவராத்திரி விரதம். சிவராத்திரி என்ற பெயர் வரக்காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில் இரவு பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தார்.நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் விதிப்படி அர்ச்சனை…